Posts

எழுத்தும் நானும்:

Image
சென்னை வந்திருந்த முதல் ஆறுமாதங்களில் கல்லூரியை அடுத்து நான் செய்த பயனுள்ள ஒரு காரியம் என்றால் என் கல்லூரிக்கு அருகில் இருந்த ஒரு புத்தகக் கடையில் பகுதி நேரப் பணிக்காக இணைந்தது தான்.  முதல் நாள் சித்தப்பா என்னை அழைத்துச்சென்று இங்கு தான் பணி என்று ஒரு புத்தகக்கடையில் சேர்த்துவிட்டு சென்றார். புகழ்ப்பெற்றப் பதிபகமான என்.சி.பி.ஹச் பதிப்பகத்தின் ஒரு கிளை அது. வினோதமான பல புத்தகங்களை வேடிக்கைப்பார்த்தே அன்று நாள் கழிந்தது. என்ன பணி எவ்வளவு சம்பளம் என எது குறித்தும் எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. 'புத்தகங்களோடு இருப்பது உனக்கு ஒருவித நல்ல அனுபவத்தைக் கொடுக்கும், தவற விடாதே' என்று சித்தப்பா கூறினார். அது முற்றிலும் உண்மை என்பதையும் நான் அறிவேன். ஆகையால் வேறு எதை குறித்தும் சிந்திக்கத் தோன்றவில்லை. அந்த நாளை மட்டும் ரசிக்கத் தொடங்கினேன்.  மறுநாள் அந்த கடையின் மற்ற ஊழியர்கள் சிலரை அறிந்துக்கொண்டதில் கழிந்தது. அது ஒரு கிருஸ்துமஸ் வாரம். அங்கங்கு வண்ண விளக்குகள் மினுங்கி இரவுகளை வசீகரமாக்கியிருந்தன. பேருந்துகளில் நகருந்தோரும் வழியில் தென்பட்ட காகித நட்சத்திரங்கள் புன்னகைத்து

சில நேரங்களில் சில மனிதர்கள்:

Image
கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் இரவு பத்துமணியைக் கடந்திருந்தது. நான் அமர்ந்திருந்த பேருந்து எந்தவித அசைவும் இன்றி நின்றுக்கொண்டிருந்தது‌. பெரிதாக நேரம் தாமதமாகிவிடவில்லை. ஆறுமணி நேரம் பயணம் செய்து வீட்டிற்கு செல்ல வேண்டும். இன்னும் சற்று நேரம் கடந்தாலும் வீடு சென்றடைவதற்குள் பொழுது காலையை நெருங்கிவிடும் என்பதால் பொறுமையாக அமர்ந்திருந்தேன்.  சிறிது நேரத்தில் நடத்துநர் பேருந்திற்குள் வந்தார். பிறகு ஓட்டுநர் அவரது இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கத் தொடங்கினார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பேருந்து நகர்ந்து வெளியேறியது. ஹாரன் ஓசையை சிறிதும் பொருட்படுத்தாமல் அந்த இரவு வேளையிலும் சாலைகளில் மனிதர்கள் உறங்காமல் அங்கங்கு உலாவிக் கொண்டிருந்தனர்.  வழக்கமாக அமரும் ஓட்டுநரின் பின்னிருக்கையில் அமர்ந்து நான் வேடிக்கைப் பார்த்துகொண்டே என் பயணத்தை தொடர்ந்தேன். ஆரம்பத்திலேயே அப்பா இங்குதான் அமர வேண்டும் என்றும் முன்னாடியே இருப்பதால் இது உனக்கானப் பாதுகாப்பும் கூட என கூறியிருந்ததை நான் ஆழமாக நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கையின் பேரில் இந்த இருக்கை எனக்க

சில நேரங்களில் சில மனிதர்கள்:

Image
அறை இருந்த அடுக்ககத்தில் இருந்து நேராகச் சென்று ஒரு சிறு வளைவை அடையும் பாதை பேருந்து நிலையத்தைச் சென்றடையும். அடுக்ககத்தில் தொடங்கி ஏழில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் இருந்தது பேருந்து நிலையம். காலை ஏழு மணிக்கு அறையில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்குவேன்.  அப்பாதையில் சில தெருக்கள் குறிக்கிடுவதுண்டு. மேலும் அவ்வழியில் ஒரு உணவகம், சில அலுவலக வளாகங்கள், ஒரு சலூன் ‌உடன் அருகிலேயே ஓர் அண்ணாச்சி கடை ஆகியவை அமைந்திருந்தன. நேராகச் சென்றபின் பேருந்து நிலையத்தை நோக்கி இருந்த சிறு வளைவில் சின்னதாக மரத்தடி பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. அங்கிருந்து இரண்டு நிமிட நடையில் பேருந்து நிலையம்.  வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடப்பது தான் எப்போதும் வழக்கம். சரியாக அண்ணாச்சி கடை அல்லது சலூன் அருகில் வரும்போது ஒரு இளைஞர் எப்போதும் என்னைக் கடந்து செல்வார். நல்ல உயரமான ஆண். திராவிட நிறம். இறுக்கமான முகம். முழுக்கை சட்டையை அணிந்து இடுப்புப் பகுதியில் சட்டையை மடித்துவிட்டுருப்பார். மேலும் ஒருபக்கம் மாட்டும் பையை நேர்த்தியாக மாட்டியிருப்பார். பார்த்த மாத்திரத்தில்  கூறிவிடலாம்

எழுத்தும் நானும்:

Image
கீழ் தளம் அல்லாது மூன்று அடுக்குகள் கொண்ட அடுக்ககத்தில் மூன்றாம் தளத்தில் இருந்த ஒரு சிறிய அறை அது. அறையின் உட்பகுதியில் அழகான பால்கனியில் சில செடி கொடிகள் அடங்கிய ஒரு தோட்டம் இருந்தது. ஆரஞ்சு வண்ணப்பூச்சுக்களோடு சுவர்கள் கொண்ட அந்த அறையில் ஒரு பக்கம் பால்கனி வாயிலும் அதன்  எதிர்திசையில் அறையின் நுழைவு வாயிலோடு வரிசையாக மூன்று சன்னல்களும் அமைக்கப்பட்டிருந்தது. நானும் தோழியும் அந்த அறையில் சில நாட்களாக இருந்து வந்தோம். தோழி அதிகமாக பயணம் மேற்கொள்பவள் என்பதால் அங்கு நான் மட்டும் தனிமையில் இருக்கும் சூழலே பெரும்பாலும் அமைந்தது. தோழியின் உடைமைகளோடு மாற்றி உடுத்திக்கொள்ள என் இரண்டு மூன்று ஆடைகளும் சில நூல்களும் அறையில் இருந்தன. காலை எழுந்து தோட்டத்துச் செடிகளுக்கு நீர் ஊற்றிவிட்டு குளித்து கல்லூரி கிளம்புதல், கல்லூரிக்கு பின் என் வேலைகளை முடித்து மாலை அறை திரும்புதல் என்ற அன்றாடங்களில் அச்சமயம் அந்த அடுக்ககத்தில் நான் பழகியிருந்த கணிசமான மனிதர்களில் மலர் அம்மா ஒருவர்.  மலர் அம்மாவிற்கு என் அன்னையின் சாயல். கருத்த தேகம். ஒல்லியும் பருமனும் அல்லாத உடல் வாகு. குரலும் அப்படியே. அதன

சில நேரங்களில் சில மனிதர்கள்:

Image
ஆசிரியப் பணியின் இடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பினை மேற்கொண்டிருந்தேன். மாலை பள்ளிவேளை முடிந்து கணக்கெடுப்புத் தொடங்கும். இப்பணி அரசு பள்ளி ஆசிரியர்களுக்காக வழங்கப்படுவது. நான் அரசு பள்ளியில் இருந்ததால் எனக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. இப்பணியால் நான் வாங்கும் ஊதியத்தோடு சிறுத் தொகை கூடுதலாகக் கிடைக்கும் என்பதால் நான் அதையும் மேற்கொண்டேன். கணக்கெடுப்பிற்காகச் செல்லும் ஒவ்வொரு தெருவிலும் நான் பணிசெய்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருந்தார்கள். அவ்வபோது என்னோடு அவர்களும் வந்து கலந்துக்கொண்டனர்.  என்னிடம் கணக்கெடுப்பிற்காக ஒரு கையேடு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் வீட்டின் எண், அவ்வீட்டில் வசிக்கும் மனிதர்களின் பெயர் வயது மற்றும் அவர்களது தந்தை அல்லது துணைவி/ துணைவன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்‌. அந்தத் தகவல்களைக் கொண்டு கணக்கினை மேற்கொள்ள வேண்டும். வீடு மாற்றல் காரணமாகவோ அல்லது இறப்பின் காரணமாகவோ இல்லாமல் போனவர்களை நீக்கி புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் மனிதர்களையும் இடைப்பட்ட வருடங்களில் பிறந்திருந்த பிள்ளைகளையும் கணக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும். பின் கையேட்டில் உ

சில நேரங்களில் சில மனிதர்கள்:

Image
காலை ஏழு மணி பேருந்திற்காகக் காத்திருந்தேன். எப்போதும்போல அங்கிருந்த மரத்தில் காகங்கள் கரைந்துகொண்டிருந்தன. வாகனங்கள் ஒவ்வொன்றாக சென்றுகொண்டிருந்தது. சில பள்ளி மாணவர்கள் ‌ஒருபுறம் நின்று பேசிக்கொண்டிருந்தனர். நான் கைக் கடிகாரத்தையும் சாலையையும்  ஊர்ந்து செல்லும் வாகனங்களையும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றேன். கைபேசி ஒலித்தது. எடுத்து அழைப்பு வந்த எண்களைப் பார்த்தேன். புதிய எண்ணாக இருந்தது. பெரும்பாலும் புதிய எண்களில் இருந்து வரும் அழைப்புகள் ஏதேனும் விளம்பரத்திற்காகவும் அல்லது கம்பெனி எண்ணாகவும் இருப்பதால் நான் அதைப்‌பொருட்படுத்தாமல் துண்டித்து விடுவதுண்டு. இம்முறையும் அதையே செய்து கைபேசியை பைக்குகள் வைத்தேன்.  பேருந்து வந்து என்னருகில் நின்றது. நான் ஏறி காலியாக இருந்த முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டேன். மீண்டும் கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன். இதற்கு முன் வந்திருந்த அதே எண். பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தேன்.  ஹலோ கீதாவா என்றது எதிர்முனையில் கேட்ட பெண் குரல்.  ஆமாம். நீங்க.. என்றேன்.  என் பேரும் கீதா தான் என்றார் அப்பெண்.  ஓ.. அப்படிங்களா. என்ன வேண்டும

ட்ராஃபிக் ஸ்டோரிஸ்:

Image
ட்ராஃபிக் ஸ்டோரிஸ்...) காலை நாங்கள் சென்ற ஆட்டோ ட்ராஃபிக்கில் நின்றுக் கொண்டிருந்தது. மௌனி அங்குமிங்கும் சுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு என்னருகில் அமர்ந்திருந்தான். நாங்கள் இருந்த ஆட்டோவின் வலது புறம் ஒரு பொக்லிங் வண்டி பழுதடைந்த தண்ணீர் லாரி ஒன்றை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றது. நாங்கள் இருவரும் அதைப் பார்த்தோம். மௌனி எனைப்பார்த்துக் கேட்டான். "அம்மா அந்த தண்ணி லாரிக்கு என்னாச்சு.." சமீபமாகதான் கவனிக்கிறேன். மௌனிக்கு வாகனங்கள் மிகவும் பிடிக்கிறது. எங்கிருந்தாலும் தன் கவனத்தை அருகில் இருக்கும் வாகனத்தின் மீது குவித்துக்கொள்கிறான். விளையாட்டு பொருட்களிலும் அதிகமாக வாகனங்களின் மாதிரிகள் தான் தேர்ந்தெடுக்கிறான். முன்னதாகவே இதையெல்லாம் கவனித்திருந்ததால் அவன் கேள்வி புதிதாக தோன்றவில்லை.  "அது ரிப்பேர் ஆயிடுச்சு பா. அதனால சரி பண்ண எடுத்துட்டு போறாங்க.." என்றேன். அப்டினா?.. இது அவனது அடுத்த கேள்வி.  நான் சிறிது யோசித்து பின் விளக்கினேன். "அப்படினா... உனக்கு உடம்பு சரியில்லனா அம்மா உன்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்ல.. அந்த மாதிரி.." அப்ப