எழுத்தும் நானும்:
சென்னை வந்திருந்த முதல் ஆறுமாதங்களில் கல்லூரியை அடுத்து நான் செய்த பயனுள்ள ஒரு காரியம் என்றால் என் கல்லூரிக்கு அருகில் இருந்த ஒரு புத்தகக் கடையில் பகுதி நேரப் பணிக்காக இணைந்தது தான். முதல் நாள் சித்தப்பா என்னை அழைத்துச்சென்று இங்கு தான் பணி என்று ஒரு புத்தகக்கடையில் சேர்த்துவிட்டு சென்றார். புகழ்ப்பெற்றப் பதிபகமான என்.சி.பி.ஹச் பதிப்பகத்தின் ஒரு கிளை அது. வினோதமான பல புத்தகங்களை வேடிக்கைப்பார்த்தே அன்று நாள் கழிந்தது. என்ன பணி எவ்வளவு சம்பளம் என எது குறித்தும் எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. 'புத்தகங்களோடு இருப்பது உனக்கு ஒருவித நல்ல அனுபவத்தைக் கொடுக்கும், தவற விடாதே' என்று சித்தப்பா கூறினார். அது முற்றிலும் உண்மை என்பதையும் நான் அறிவேன். ஆகையால் வேறு எதை குறித்தும் சிந்திக்கத் தோன்றவில்லை. அந்த நாளை மட்டும் ரசிக்கத் தொடங்கினேன். மறுநாள் அந்த கடையின் மற்ற ஊழியர்கள் சிலரை அறிந்துக்கொண்டதில் கழிந்தது. அது ஒரு கிருஸ்துமஸ் வாரம். அங்கங்கு வண்ண விளக்குகள் மினுங்கி இரவுகளை வசீகரமாக்கியிருந்தன. பேருந்துகளில் நகருந்தோரும் வழியில் தென்பட்ட காகித நட்சத்திரங்கள் புன்னகைத்து