சில நேரங்களில் சில மனிதர்கள்:
காலை ஏழு மணி பேருந்திற்காகக் காத்திருந்தேன். எப்போதும்போல அங்கிருந்த மரத்தில் காகங்கள் கரைந்துகொண்டிருந்தன. வாகனங்கள் ஒவ்வொன்றாக சென்றுகொண்டிருந்தது. சில பள்ளி மாணவர்கள் ஒருபுறம் நின்று பேசிக்கொண்டிருந்தனர். நான் கைக் கடிகாரத்தையும் சாலையையும் ஊர்ந்து செல்லும் வாகனங்களையும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றேன். கைபேசி ஒலித்தது. எடுத்து அழைப்பு வந்த எண்களைப் பார்த்தேன். புதிய எண்ணாக இருந்தது. பெரும்பாலும் புதிய எண்களில் இருந்து வரும் அழைப்புகள் ஏதேனும் விளம்பரத்திற்காகவும் அல்லது கம்பெனி எண்ணாகவும் இருப்பதால் நான் அதைப்பொருட்படுத்தாமல் துண்டித்து விடுவதுண்டு. இம்முறையும் அதையே செய்து கைபேசியை பைக்குகள் வைத்தேன். பேருந்து வந்து என்னருகில் நின்றது. நான் ஏறி காலியாக இருந்த முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டேன். மீண்டும் கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன். இதற்கு முன் வந்திருந்த அதே எண். பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தேன். ஹலோ கீதாவா என்றது எதிர்முனையில் கேட்ட பெண் குரல். ஆமாம். நீங்க.. என்றேன். என் பேரும் கீதா தான் என்றார் அப்பெண். ஓ.. அப்படிங்களா. என்ன வேண்டும