TREES OF PEACE (Alanna Brown)
நான் கல்லூரி பயின்றது சென்னையில். இங்கு ஒரு அரசு விடுதியில் தங்கிப் படித்தேன். என் விடுதி மூன்றடுக்கு கொண்டது. கீழடுக்கும் இரண்டாம் அடுக்கும் கல்லூரி இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டது. முதலடுக்கு முதுகலை மற்றும் ஆய்வியல் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஓர் அடுக்கில் முறையே பத்து அறைகள் இருக்கும். ஓர் அறைக்கு முப்பது மாணவிகள் வீதம் இருந்தோம். உணவிற்கு, உறக்கத்திற்கு, நீருக்கு என்று நாங்கள் பட்ட பாடு இன்னும் கண்களில் மறையவில்லை. விடுதியைப் பார்த்த முதல் நாளே 'படிப்பே வேண்டாம் என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க' என்று அழ ஆரம்பித்துவிட்டேன். எல்லாமும் புதிது எனக்கு. அந்தக் கூட்டம் உட்பட. உறக்கத்தில் கையை நீட்டக் கூட உரிமை இருக்காது. உணவுக்கான வரிசையில் பத்து பதினைந்து பேரை தாண்டினால் சாப்பாட்டிற்குக் குழம்பு கிடைக்காது. காலை ஆறுமணிக்கு மேலானால் குளியல் அறை கிடைக்காது. காய்ந்த துணிமணிகளை எடுக்க தாமதமானால் நல்ல சுடிதாரோ மிடியோ திரும்ப கிடைக்காது. இப்படி ஒருமுறை என் கைபேசி தொலைந்தது. பிறகொருமுறை என் கடைசி இருநூறு ரூபாய். எதுவுமே போதாத ஒரு வா