சிலம்பும் - இறைவியும்
அன்னை, மனைவி, காதலி, மகள், மருமகள், அக்கா, தங்கை, தோழி, கடந்து செல்லும் யாரோ ஒருத்தி, காசுக்காக உடன் படுக்கும் விபச்சாரியானாலும் முதலில் அவள் பெண். ஆடை, ரத்தம், சதை தாண்டிய ஒரு பெண். எழுதப்பட்ட காப்பியத்தில் ஒரு கண்ணகி. ஆனால் இங்கு எழுதப்படாத எத்தனையோ காப்பியங்கள் நாள்தோறும் நிகழ்ந்துக்கொண்டே தான் இருக்கின்றன. கண்ணகிகள் பிறந்துக்கொண்டே தான் இருக்கின்றனர். முதுகலை பயிலும்போது ஏன் அதற்குப் பின்னதாய்கூட எனக்குப் பிடித்த பாடமென்றால் அது "சிலப்பதிகாரம்" தான். இப்படம் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு இதுவே பெரிய காரணம். இப்படத்திற்கு பின்னதாக ஏற்பட்ட தெளிவுதான் எனையே எனக்குக் காட்டியதும். மழை இப்படத்தின் முதன்மையான ஒரு பாத்திரமாகியிருக்கிறது. ஆம், மழை என்பவள் தான் பெண். கண்களில் எதிர்காலம் குறித்த கனவுகளோடு வாழும் துறுதுறுப் பெண். தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்காலத்தை அனுபவிக்கத் தயாராகும் புதுமைப் பெண். கணவனின் கொடுமைகளைத் தாங்கித் தன் பிள்ளைகளுக்காய் வாழ எத்தனிக்கும் கனிவானப் பெண். கையிருப்பு வாழ்க்கையை ரசிக்கக் காத்திருக்கும் நவீனப் பெண். மழைக்கேது வகைகள். இ