MEMOIRS OF GEISHA
Memoirs of Geisha தெளிந்த நீரோடையாக, நிசப்தமான நிலைக்கண்ணாடியாக காட்சியளிக்கும் காலம் தன்னகத்தே எண்ணற்ற இரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கிறது. நிகழ்ந்தவற்றின் மீதோ நிகழ்பவற்றின் மீதோ காலத்திற்கு எந்தப் பற்றும் பரிவும் இல்லை. கடந்து போய்க்கொண்டே இருப்பது காலம். வரலாற்றின் பின்னணியில் எந்த ஒன்றையும் அறிய குறிப்பாய்ப் பெண்களின் நிலை குறித்து தெரிந்துகொள்ள நூல்களே சிறந்த ஆவணமாக இருந்துள்ளது. இப்போது திரைப்படங்களும் அதில் இணைந்திருக்கின்றன. அந்த வகையில் 1997 ல் வெளியாகியுள்ள Arthur Golden எழுதிய 'memoirs of Geisha' என்னும் நூல் அதே பெயரில் Rob Marshal என்பவரால் 2005 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. 1929 ல் நடைபெறுவதாகக் கூறப்படும் இக்கதை நிகழும் காலகட்டத்தின் முன்பிருந்தே இப்படியான Geisha முறைகள் கீழை நாடுகள் பலவற்றில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே பழக்கத்திலிருந்த இம்முறையில் கெய்ஷா என்பவர் ஆடல் பாடல் இசை மருத்துவம் போன்றவற்றை முறையாக கற்றறிந்து தேர்ந்திருப்பவர். சமூகத்தில் முக்கியமான செல்வந்தர்களையும் அரசாங்க பிரமுகர்களைய