சில நேரங்களில் சில மனிதர்கள்:
வழக்கமாகப் பேருந்து பயணங்களில் ஓட்டுநரின் பின் இருக்கையில் அமர வேண்டும். வேறெங்கும் இடையில் இறங்கிவிடக் கூடாது. ஒவ்வொரு ஒரு மணிநேரத்திற்கும் ஒரு அழைப்பைத் தர வேண்டும் என்பதெல்லாம் வீட்டின் அன்புக்கட்டளைகள். என் பாதுகாப்பிற்காகத்தான் என்று உணர்ந்திருந்ததால் இதையெல்லாம் மீறவும் தோன்றியதில்லை. இக்கட்டளைகளில் மிக முக்கியமானது இரவுப்பயணம் கூடாது என்பது. சென்னையில் இருந்து வீட்டிற்குச் செல்லும்போது இரவுப்பயணங்கள் தான் சரியாக இருக்கும். அதனால் சில முறை வீட்டிற்குத் தெரியப்படுத்தாமலேயே சென்றுவிடுவதுண்டு. அப்படி ஒருமுறை தேர்தல் சமயத்தில் சென்னையில் இருந்து ஊருக்குச் செல்ல கோயம்பேடு வந்திருந்தேன். மணி பத்தைக் காட்டியது. பெரும்பாலும் பேருந்தே இல்லை. வெகு நேரமாக பலர் பேருந்துக்காகக் காத்திருந்தனர். மணி பதினொன்றானது. பேருந்து ஒன்றுகூட இல்லை. விழுப்புரம் சென்று அங்கிருந்து மாறும் நோக்கத்தோடு சிலர் விழுப்புரம் பேருந்துகள் நிற்கும் இடத்திற்குச் சென்று பார்த்தனர். பயனில்லை. பையில் எப்போதும் எதாவது ஒரு புத்தகத்தை வைத்திருப்பேன். அன்று பாடப்புத்தகமான இலக்கிய வரலாறு இருந்தது. படிக்கலாம்