Posts

Showing posts from October, 2023

எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

Image
கல்லூரியின் முதல் பருவம் அது. ஒரு நாள் மதிய உணவிற்குப் பிறகு ஒரு அழைப்பு வந்தது. சித்தப்பா அழைத்திருந்தார். 'இன்று "வின்" தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வு இருக்கிறது நீ சென்று கலந்துகொள்' என்றார். 'கன்னிமாரா நூலகத்தில் காத்திரு. நண்பர் பெரியசாமி வந்து உன்னை அழைத்துச் செல்வார்' என்று அழைப்பைத் துண்டித்தார்‌. என்ன நிகழ்வு அது?, நான் சென்று என்ன செய்ய வேண்டும்? என்றெல்லாம் எந்தவிதமான கேள்விகளும் என்னிடம் இல்லை. சித்தப்பா சொல்லியிருக்கிறார். ஆகையால் நான் செல்ல வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. கன்னிமாரா நூலகம் சென்றேன். அத்தனை பெரிய நூலகத்தை அப்போது தான் முதல்முறையாகக் கண்டேன். அதற்கு முன்னால் எதற்கெல்லாம் நான் வியந்திருப்பேன் என்று நினைவில்லை. அன்று அந்த அளவிற்கு வியந்தேன்.  நூலகத்தின் உள்ளே சென்றேன். எங்கும் அமைதி. புத்தகங்களின் பக்கங்களைத் திருப்பும் சிறு ஓசைக்கூட அந்த அமைதியில் பிரதிபலித்தது. ஒருமுறை சுற்றிப்பார்த்தேன். அங்கிருந்த ஒரு வட்டமேசை மீது சில நூல்கள் பரப்பப்பட்டிருந்தன. ஒரு நூலை எடுத்துப் பார்த்தேன். மிகப் பழைய நூல். பக்கத்தில் இருந்

சில நேரங்களில் சில மனிதர்கள் (தொடர்ச்சி)

Image
மதிய உணவு இடைவேளை முடிந்து மாணவர்கள் வகுப்பிற்குள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தனர். வருகைப் பதிவேட்டைத் திறந்து காலைவேளையில் வந்திருந்த மாணவர்களுக்கு மாலை வருகையைப் பூர்த்தி செய்தேன். மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களின் வகுப்பு ஆசிரியை நான். பள்ளி நுழைவு வாயிலில் இருந்து பார்த்தால் வகுப்பறை நன்றாக தெரியும். வகுப்பில் இருந்து பார்த்தாலும் அதேபோல் நுழைவு வாயில் தெரியும். வகுப்பிற்கும் வாயிலுக்கும் இடையில் வரிசையாக நான்கு வேப்பமரங்களும் நுழைவு வாயிலின் இடதுபுறம் அலுவலகமும் வலது ஓரமாக ஒரு பொது அறையும் இருந்தது. பொது அறை மாணவர்களின் மதிய  உணவு  உண்ணும் அறையாகவும் பள்ளி நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்திகொள்வதுண்டு. சிறிது நேரம் சென்றது. பெரிய வேன் ஒன்று வந்து நின்றது. அதுவரை பார்த்திராத சிலர் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு நேராக மாணவர்கள் மதிய உணவு உண்ணும் அறையின் வாசலில் வந்து நின்றனர். அறை பூட்டியிருந்தது .வேன் கிளம்பியது. இதற்குள் பள்ளி இருக்கும் பகுதியின் கவுன்சிலர் வந்தார். அலுவலகத்திலிருந்து சாவியை வாங்கிக்கொண்டு வந்து அறையை திறந்தார். உடன் வந்தவர்கள் அறையின் உள்ள