சில நேரங்களில் சில மனிதர்கள்:
அறை இருந்த அடுக்ககத்தில் இருந்து நேராகச் சென்று ஒரு சிறு வளைவை அடையும் பாதை பேருந்து நிலையத்தைச் சென்றடையும். அடுக்ககத்தில் தொடங்கி ஏழில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் இருந்தது பேருந்து நிலையம். காலை ஏழு மணிக்கு அறையில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்குவேன். அப்பாதையில் சில தெருக்கள் குறிக்கிடுவதுண்டு. மேலும் அவ்வழியில் ஒரு உணவகம், சில அலுவலக வளாகங்கள், ஒரு சலூன் உடன் அருகிலேயே ஓர் அண்ணாச்சி கடை ஆகியவை அமைந்திருந்தன. நேராகச் சென்றபின் பேருந்து நிலையத்தை நோக்கி இருந்த சிறு வளைவில் சின்னதாக மரத்தடி பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. அங்கிருந்து இரண்டு நிமிட நடையில் பேருந்து நிலையம். வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடப்பது தான் எப்போதும் வழக்கம். சரியாக அண்ணாச்சி கடை அல்லது சலூன் அருகில் வரும்போது ஒரு இளைஞர் எப்போதும் என்னைக் கடந்து செல்வார். நல்ல உயரமான ஆண். திராவிட நிறம். இறுக்கமான முகம். முழுக்கை சட்டையை அணிந்து இடுப்புப் பகுதியில் சட்டையை மடித்துவிட்டுருப்பார். மேலும் ஒருபக்கம் மாட்டும் பையை நேர்த்தியாக மாட்டியிருப்பார். பார்த்த மாத்திரத்தில் கூறிவிடலாம்