Posts

Showing posts from May, 2024

சில நேரங்களில் சில மனிதர்கள்:

Image
மௌனிக்கு கண் பரிசோதனைக்காகச் சென்றிருந்தேன். வழக்கமாகச் செல்லும் சாலை ஒன்றின் ஓரத்தில் எப்போதும் கண்ணில்படும் கண் மருத்துவமனை அது. ஆனால் அன்றுதான் முதல் முறையாக உள்ளே சென்றிருந்தேன். இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட  வீடொன்றினைப்போல் காட்சியளித்தது மருத்துவமனை. உள்ளே மருத்துவமனை சுவற்றில் கண்களின் அமைப்புப் படங்கள். மற்றும் கண்களை பராமரிக்கவென சில ஆங்கில வாசகங்கள். அந்த மருத்துவமனைக்காக வழங்கப்பட்ட சில விருதுகள். சில நற்சான்றிதழ்கள் போன்றவை வரவேற்பு அறையின் ஒருபக்கம் சுவர் ஓரமாக காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. காத்திருப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் அழகான குட்டிவிலங்குகள் விளையாடிக்கொண்டிருந்தன.  உள்நுழைந்தவுடன் மருத்துவமனைக்கான எழுதப்படாத வழக்கத்தைப்போல் பெயர் முகவரி குறித்த விவரங்களை வாங்கிக்கொண்டு காத்திருப்பு அறையை காட்டினார் ஓர் இளம் செவிலி. நான்கு நான்கென மூன்று வரிசையாக இருந்த இருக்கைகளில் முதல் வரிசையில் ஒரு இசுலாமிய தம்பதியரும் இறுதி வரிசையின் வலது ஓரத்தில் இளம் பெண் ஒருத்தியும் இடது ஓர இருக்கையில் நாற்பதை கடந்தவர்போல் தோற்றமளித்த சிவப்பு ...

சில நேரங்களில் சில மனிதர்கள்:

Image
சென்னை வந்திருந்த முதல் ஆறுமாதங்களில் கல்லூரியை அடுத்து நான் செய்த பயனுள்ள ஒரு காரியம் என்றால் என் கல்லூரிக்கு அருகில் இருந்த ஒரு புத்தகக் கடையில் பகுதி நேரப் பணிக்காக இணைந்தது தான்.  முதல் நாள் சித்தப்பா என்னை அழைத்துச்சென்று இங்கு தான் பணி என்று ஒரு புத்தகக்கடையில் சேர்த்துவிட்டு சென்றார். புகழ்ப்பெற்றப் பதிபகமான என்.சி.பி.ஹச் பதிப்பகத்தின் ஒரு கிளை அது. வினோதமான பல புத்தகங்களை வேடிக்கைப்பார்த்தே அன்று நாள் கழிந்தது. என்ன பணி எவ்வளவு சம்பளம் என எது குறித்தும் எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. 'புத்தகங்களோடு இருப்பது உனக்கு ஒருவித நல்ல அனுபவத்தைக் கொடுக்கும், தவற விடாதே' என்று சித்தப்பா கூறினார். அது முற்றிலும் உண்மை என்பதையும் நான் அறிவேன். ஆகையால் வேறு எதை குறித்தும் சிந்திக்கத் தோன்றவில்லை. அந்த நாளை மட்டும் ரசிக்கத் தொடங்கினேன்.  மறுநாள் அந்த கடையின் மற்ற ஊழியர்கள் சிலரை அறிந்துக்கொண்டதில் கழிந்தது. அது ஒரு கிருஸ்துமஸ் வாரம். அங்கங்கு வண்ண விளக்குகள் மினுங்கி இரவுகளை வசீகரமாக்கியிருந்தன. பேருந்துகளில் நகருந்தோரும் வழியில் தென்பட்ட காகித நட்சத்திரங்கள் புன்னகைத்த...