Posts

Super Happy Forever: (Kohei Igarashi)

Image
தன் அன்பிற்கினிய உறவு உலகை விட்டு மறைந்த பிறகு அப்பிரிவை ஏற்கத் துணியாத மனிதர்கள் மீண்டும் மீண்டும் அந்த உறவு தொடங்கப்பட்ட புள்ளிவரைச் சென்றுப் பார்க்க முற்படுகின்றனர். இப்படி இருந்தோம், இப்படித்தான் சந்தித்தோம், இப்படிப் பழகினோம், இப்படியானது எங்கள் உறவு என்று சதா மறைந்தவர் உடனான நினைவுகளை அசைபோடுகின்றனர். மறைந்தவர்கள் விட்டுச்சென்ற பொருட்கள், அவர்களோடு உறவாடிய வார்த்தைகள், நினைவுகள் என ஒவ்வொன்றாகத் தேடியெடுத்து அருகாமையில் வைத்துக்கொள்ள தவிக்கின்றனர். எத்தனையோ சிரத்தைகளை மேற்கொண்டு எப்படியாவது ஏதேனும் ஒரு வகையில் அந்த உறவின் ஏதோ ஒரு பிடியை அல்லது அந்த உறவின் இருப்பைத் தன்னோடு தக்கவைத்துக்கொள்ளவென நிதம் போராடுகின்றனர்.  நகி சனோ துடிப்பான இளம்பெண். தன் பொருட்களை தொலைப்பதையே அன்றாடமாகக் கொண்ட, அப்படித் தான் தொலைக்கும் எந்த பொருளுக்காகவும் வருந்தாத ஒரு பெண் புகைப்பட கலைஞர். இசு நகரத்திற்கு சுற்றுலாப் பயணியாக வருகிறார். சனோ என்ற அதே பெயருடைய இளைஞர் ஒருவர் எதேச்சையாக நகியை சந்திக்கிறார். மிக இயல்பாக இருவருக்கும்  நட்பு ஏற்படுகிறது...

சில நேரங்களில் சில மனிதர்கள்

Image
விடுதி அறையில் என்னோடு இருந்த தோழி ஒருத்தி ஜானு. அதிகம் பேசியதில்லை. எப்போதாவது பார்த்தால் சிரிப்பாள். பதிலுக்கு நானும் சிரிப்பேன். ஜானுவைக் குறித்துக் கூறவேண்டும் என்றால் அறையில் இருந்த இரண்டு ஒல்லியான பெண்களில் அவளும் ஒருத்தி. இன்னொருத்தி நான். கருமை கரந்த வெளிர் நிறம் அவள். உடலைக் காட்டிலும் ஒல்லியான முகம். சிறிய கண்கள். மிகச் சாதுவான பூனை ஒன்றின் தோற்றம் அவளுடையது. தேர்ந்தெடுத்த ஒரு சிலரோடு மட்டும் பழகும் ஜானு அதிகம் பேசாத பெண்‌‌. எப்போதேனும் எதாவது கேட்டால் கேட்பவருக்குப் பதிலுரைப்பாள் அவ்வளவே. அறையில் அவளது நடவடிக்கைகளை வைத்து அவள் வகுப்பில் நன்றாகப் படிக்கும் பெண் என்று நாங்களாகவே யூகித்து வைத்திருந்தோம். ஒருநாள் இரவு உணவு வேளையில் ஜானு என்னருகில் வந்து அமர்ந்தாள். புதிதாக இருந்தது‌. அதுவரை அவள் அப்படி என்னோடோ வேறு யாருடனோ அமர்ந்ததில்லை என்றாலும் எதையோ பேச எத்தனிப்பதாக எனக்குத் தோன்றியது. அருகில் அமர்ந்தவள் தொடர்ந்தாள். கீதா. ம்ம். “ஒன்னு கேட்பேன். தப்பா எடுத்துப்பியானு தெரியல.” அவள் குரலில் ஒரு தயக்கம் தெரிந்தது. கேளு. பரவால. “இல்ல.. வந்து..” தயக்கத்தோடு இழுத்தாள். ...

மௌனியும் அம்மாவும்:

Image
மௌனியும் அம்மாவும்:  இந்த வீடு நீ எப்படி வரைஞ்ச மா?  இது வந்து சின்ன வயசுல எங்க வீடு இப்படி இருந்துச்சு. ஓ.. இப்படி தான் இருக்குமா? ஆமா? அங்க ஒரு மரம் இருந்தது. பக்கத்துலையே ஒரு நிலாவும் இருந்தது.  ஓ... என்னோட சின்ன வயசுல என்னோடு வீடு வானம் அளவுக்கு இருந்தது தெரியுமா?  அப்படி‌யா? இப்பவும் நீ சின்ன பையன் தான? ஆமா. ஆனா நான் சொல்றது முன்னாடி.. சின்ன வயசுல.  முன்னாடினா? நான் சொல்றது நீயும் கார்த்தியும் எனக்கு அம்மா அப்பாவா இல்லாதப்போ வேறொரு அப்பா அம்மா இருந்தாங்கள்ள அப்போ.. அந்த சின்ன வயசுல சொல்றேன்..  ஓ.. உனக்கு அதெல்லாம் நியாபகம் இருக்கா என்ன.  ஆமா.  அந்த அப்பா அம்மா பேரு என்ன?  அவங்க பேரும் கார்த்திக் கீதா தான்.  அதெப்படி.. அப்போ அதும் நாங்க தான? இல்லையே.. ஆனா நான் உன்னை பாத்துருக்கேன்.  எங்க பார்த்த..  அப்போ எங்க வீட்டு வாசல்ல விளையாடினேன். நீ அந்த வழியா போனியா அப்போ என்ன பாத்து என்ன டா குட்டி பையானு கூப்ட்ட.  யாரு நானு?  ஆமா.. நீ தான்..  நான் நம்ப மாட்டேன்.  நிஜமா தான். ‌ சரி.. நான் என்ன கலர் ட...

சிலநேரங்களில் சில மனிதர்கள்:

Image
பணியாற்றிய காலங்களில் வகுப்பைக் காட்டிலும் அதிகமாக மரத்தடியில் பாடம் கற்பிப்பதை வழக்கமாக்கி இருந்தேன். இயற்கையோடு இயைந்த கல்வியாக அது இருக்கும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும் ஒருகாலத்தில் அதே மரத்தடியில் அமர்ந்து நான் படித்த நினைவுகளின் தூண்டுதலும் இன்னொரு காரணமாக இருந்தது.  சில வேளைகளில் அதேப் பள்ளியில் நான் ஓடி ஆடிய நினைவுகள் எழுவதுண்டு. அச்சமயங்களில், இப்போதிருக்கும் கல்விமுறையால் வகுப்பில் நிகழும் உரையாடல் போன்றோ கற்றல் கற்பித்தல் போன்றோ ஏன் ஒருபோதும் நான் படித்த காலத்தில் நிகழவேயில்லை என்ற கேள்வியும் ஏக்கமும் தோன்றி மறைவதுண்டு.  ஒருவேளை அப்படி நிகழ்ந்திருந்தால் இன்னும் சற்று புரிதலோடும் ஈடுபாட்டோடும் படித்திருக்கலாம். இதனால் தான் எனக்கு படிப்பில் அத்தனை ஆர்வமில்லாமல் போனதோ என்றும் தோன்றுவதுண்டு. அனேகமாக தொண்ணூறுகளில் வாழ்ந்த பெரும்பாலான மாணவர்களின் நிலை இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.  எனக்கு படிப்பில் ஆர்வமில்லாததால் பள்ளி நாட்களை நான் வெறுத்தேன். முக்கியமாக எனது பத்து வயது வரை. எப்படியாவது என்னை ஏமாற்றி வீட்டில் யாராவது பள்ளிக்கு அழைத்துவந்து வி...

Loving (Jeff nichols)

Image
Loving (2016) - Jeff Nichols மனிதகுலத்தின் மிக நீண்ட வரலாற்றைத் தாங்கிப் பிடித்திருப்பது வீரமாக இருந்தாலும் அதற்கு இணையாக ஈடுகொடுத்து நிற்பது காதல். ஒரு காதல் என்ன செய்யும், ஒரு காதல் எல்லாமும் செய்யும். வேண்டுமென்றால் இந்த உலகை அழித்தொழிக்கும். மாறாக ஒரு புதிய உலகை படைத்தெடுக்கும். காதலில் எல்லாமும் சாத்தியம். கடந்த ஆண்டு பார்த்தப் படங்களில் மிக வியக்க வைத்த ஒரு காதல் கதை லவ்விங். உண்மையாக நடந்த கதை.  தயங்கி தயங்கி தான் கருவுற்ற செய்தியைத் தன் காதலனிடம் கூறுகிறாள் மைல்ட்ரெட். அதைக் கேட்ட மாத்திரத்தில் மகிழும் காதலன் அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான். அதோடு தன் காதல் மனைவிக்கு அழகான‌ ஒரு வீடு கட்ட முயல்கிறான். கருப்பர்கள் மீது உச்சபட்சமான தீண்டாமையை, வெறுப்புணர்ச்சியைக் கடைப்பிடிக்கும் அந்த ஊரில் வெள்ளை ஆண்மகனான ரிச்சர்ட்க்கும் கருப்புப் பெண்மணியான மைல்ட்ரெட்டிற்கும் கலப்புத் திருமணம் நடந்து முடிகிறது.   வெர்ஜினியாவின் ஒரு பகுதியில் வாழும் இவர்களின் திருமணம் அப்பகுதியின் சட்டத்திற்குச் செல்லுபடியாகாது என இருவரையும் கைது செய்கின்றனர். ஆனால் மைல்ட்ரெட...

சிலநேரங்களில் சில மனிதர்கள்:

Image
முதுகலை முதலாம் ஆண்டு படிக்கையில் விடுதி அறைக்குப் புதிதாக ஒரு பெண் வந்து சேர்ந்தார். பெயர் சோபியா. எனக்கு மட்டும் தான் அவள் புதியவளாக தெரிந்திருந்தாள் போல. விடுதியில் மற்ற எல்லோருக்கும் ஓரளவிற்கு பரிச்சயமான பெண்ணாகவே இருந்ததாகத் தோன்றியது. என் அறை மாணவிகள் சிலருக்கு அவள் எப்போதோ ஒருமுறை நெருங்கிய தோழியாக இருந்துள்ளாள் என்பதும் அவள் வந்திருந்த இரண்டொரு நாட்களில் அறிந்துகொண்டேன். இருப்பினும் யாரும் அவளோடு இப்போது நெருங்கிப் பழகுவதாகத் தோன்றவில்லை.  சோபியா நல்ல உயரம். ஐந்து அடிக்கு மேல் இருக்கலாம். தொட்டு எடுத்து கண் இமைகளில் தீட்டிக்கொள்ளும் கண் மை கருப்பு அவள் நிறம். ஆனால் நல்ல இலட்சணமான முக அமைப்பு.  பொருட்கள் வைத்துக்கொள்ள  எனக்காக ஒதுக்கப்பட்ட அலமாரிக்கு மேல் பகுதியில் இருந்த அலமாரி சோபியாவுக்காக ஒதுக்கப்பட்டது. ஒருமுறை நான் என் அலமாரியில் எதையோ தேடிக்கொண்டிருந்த சமயம் சோபியாவின் சில துணிகள் என் மீது விழுந்தன. இதை எதிர்பார்க்காத சோபியா பதற்றத்தோடு சாரி பாப்பா என்று கூறிக்கொண்டே துணிகளை எடுத்து மீண்டும் அடுக்கினாள்.  பரவால.. தெரியாமத்தான விழுந்தது.. ப்ர...

அனாகத நாதம்:

Image
அனாகத நாதம்: செந்தில் ஜெகன்நாதன்  சொற்றுணை பதிப்பகம் வெளியீடு. இந்த நூல் செந்தில் ஜெகன்நாதனின் இரண்டாவது நூல். முதல் நூல் மழைக்கண்.  செந்தில் ஜெகன்நாதனின் படைப்புகள் எளிய மனிதர்களின் வாழ்வினை அதன் இயல்பிலேயே பேசிச் செல்பவை. அனாகத நாதமும் எட்டு சாமானிய மனிதர்களின் வாழ்வினை அந்தப் பாதையிலேயே சொல்லிச் செல்கிறது.  எட்டுக் கதைகளும் எட்டுவிதம்.  செந்தில் ஜெகன்நாதனின் கதைகளில் தந்தை என்ற கதாப்பாத்திரம் நீங்காமல் இடம் பிடித்துவிடுகிறது. தந்தை இல்லாத மனிதன் இங்கு யாரு? இதற்கேற்ப இவர் கதைகளில் விரும்பும் மனிதராகவும் வெறுக்கும் மனிதராகவும் அடிக்கும் மனிதராகவும் அரவணைக்கும் மனிதராகவும் முதலில் தந்தையாகத்தான் தான் இருக்கிறார்.  சாயை கதையில் வரக்கூடிய ஒரு பாத்திரம். படப்பிடிப்பு தளத்தில் காக்கைகளை ஓட்ட நியமிக்கப்பட்ட  ஒரு பணியாள் குறித்த கதை. இந்தப் பணியே இதுவரை நான் கேள்விப்படாத ஒன்றாகத் தோன்றியது. இக்கதையிலும் ஒரு தந்தை இருக்கிறார்.  தம்பொருள் கதையின் முடிவில் ஒரு இனம்புரியாத கனமும் கந்தவேலுவின் அமைதியும் அவரது டிவிஎஸ் எக்ஸெல் சத்தமும் நம்மையும் பீடித்...